Saturday, December 18, 2010

இதயம்..

நான்கு அறைகளாக,
பிரிந்து கிடந்தாலும்,
ஒன்றாக சேர்ந்து துடிக்கிறது - உனக்காக..

முதல் துடிப்பு முளைக்கிறது
உன் பார்வையில்,

ஒவ்வொரு துடிப்பிலும்,
உன் வரவு இங்கு வாழ்க்கையாகிறது
உன் பாதச்சுவடுகளில்,

இறுதி துடிப்பு மட்டும் இறப்பாகிறது..
நீ இல்லையென்றால்..

இதயம் என்றாலே துடிப்பது தானே..
அதற்கு வேலையில்லை..
சில சமயம் வலிகளில் துடிக்கிறது..
உன்னை காணாமல்,

சில சமயம் சந்தோஷத்தில் துடிக்கிறது
உன் வருகையால்..

ஆனால்
அதன் துடிப்பின்
சத்தம் மட்டும்,
உணர்தலில்
கேட்கப் படுகிறது...

மனித ஒற்றுமை
மனித உருவத்தில்
மாறினாலும்,
இதய உருவத்தில்
இணைகிறது - காதல்..
Download As PDF