Wednesday, July 17, 2013

பாதையில்லா முகவரிகள்..

மக்கள்,
மண்ணுலகம் அழிந்து விடுமோ!
என்று காத்திருந்த போது,
நானே நிலவு அழிந்து விட வேண்டும்..
என்று காத்திருந்தவன்..
எல்லாம் ஒருவித நம்பிக்கைகள்..



நிலவின் தேவதை,
பூமியை தஞ்சம் அடைவாள் என்றும்..
நான் அவளை சந்திப்பேன் என்றும்..
நிலாவிற்கு,
பூமிக்கும்,
ஒரே முகவரி,
ஒரு பாதையில்லா முகவரி,
நீலவானம்..

கவிதை
எழுதி எழுதி
கசக்கி எறிந்த
காகிதங்கள்
நீலவானத்தில்
நட்சத்திரங்களாய்..



இமைகள் கதவுகள்
இரு விழி நினைவுகள்,
நித்திரை உலகம்..
பாதையில்லா முகவரி,
கனவுகள்..
காதல்..

சரியில்லை
சரியில்லை..


சரிவராத,
இக்கவிதையையும்,
கசக்கி எறிகிறேன்..

நீலவானம்
நீண்டு கொண்டே போகிறது..
காரணம்,
என் காதலும்
சரிவராத கவிதையும்..



உனக்கான அழகான கவிதையை,
சற்றே யோசித்து கொண்டே இருக்கிறேன்..

தூக்கத்தை தொலைத்தவனுக்குத்தான்
கனவுகள் வருவதில்லையே..
கவிதைகள் மட்டும் எப்படி..

புரிந்தது...
பாதையில்லா முகவரியில்,
பயணிக்கிறது ஒரு கவிதை..
நான் பூமி...
அவள் என் தேவதை..

Download As PDF