Sunday, April 1, 2012

என்னை தத்தி என்பாய்...


என்னை விட்டு,
எப்பவும் என் தோழிகள்..
தள்ளியே நடக்கிறார்கள்..
பிடிக்கவில்லை என்பாய்..
காரணம் என்னவென்று,
என்னிடம் கேட்பாய்..

நிலாவை விட்டு,
தள்ளியே இருக்கும்
நட்சத்திரங்களுக்கு மட்டும்
தெரிந்த ரகசியத்தை,
நான் எப்படி அறிவேன் என்பேன்..

என்னை தத்தி என்பாய்...

ஆம்,
உன் வீட்டு கதவை,
முதல் முதலாய்,
தட்டிய போது,
கதவை திறந்த நீ,
முகத்தை மட்டும்,
காட்டிய போது தான்
எனக்கே புரிந்தது..
வானில் தெரியும்
நிலவின் ரகசியம்..

கடவுளின் படைப்பை
புரிந்தவன் எவன்..
முயற்சிக்காமல்,
காதலின் விழுதல் நலன்
என்று நம்பிவன் நான்..



















சில சமயங்களில்,
வாய் தவறி,
நிலா என்று அழைப்பதுண்டு..

நிலாவா?
அது இரவில் மட்டும்
என்று அறிவாளிதானமாக
பேசுவாய்..

அப்படி நீ பேசும் போதெல்லாம்,
உன்னால் ஒளி பெறும்
சூரியன் ஆனேன் நான்..

எப்பொழுதும் என்னிடம்
நீ கேட்கும் கேள்வி..
என்னை ஏன்
காதலித்தாய் என்று..
Surya and Jyothika @ Karthi Wedding Photos
உன்னை நான் எதற்கு காதலித்தேன்..
என்று தெரியவில்லை...
தெரிந்து கொள்ள தானே...
தினமும் காதலிக்கிறேன் என்பேன்...

உனக்கு அமைதி கோபம் வரும்..
சமதானப்படுத்து வழி தெரியாமல்,
உடனடியாக தெரிய வேணுமா?
இப்போது நீ போய்,
உன் வீட்டு கண்ணாடியிடம் கேள் என்பேன்..






















போடா தத்தி என்பாய்..

மனதில் சொல்லிக் கொண்டேன்...
நான் தத்தி தான்..
என் தத்தையே...

எனக்கொரு ஆயுள் தேவை..
உன்னை ஏன் காதலித்தேன்...
தெரிந்து கொள்ள,
பிறகு சொல்ல..
Download As PDF