Monday, August 13, 2012

உனக்கான கவிதைகள் முடிவதில்லை..

என்னவளே!
நீ
பிறந்தவுடன்,
எழுதிய ஜாதகம் எங்கே??



கட்டங்களுக்குள்
உன் வாழ்க்கையை
எழுதியவன் யார்?

அவனிடம் ஒன்று கேட்க வேண்டும்..
உன்னை,
பார்த்திலிருந்து,
நான் எழுத
தொடங்கிய
கவிதையையும்,
காதலையும்
எப்படி முடிப்பது என்று..



ஒன்று மட்டும் புரிகிறது..
உனக்கான முடிவில்லா
கவிதையை எழுத
ஆரம்பித்து விட்டேன்..
என் காதலால்....


என்னவளே! இனி,
உன்னைப்பற்றி,
தெரிந்து கொள்ள,
ஜாதகம் தேவையில்லை..
எழுதியவனிடம் சொல்லிவிடு..
உன்னை பற்றி,
நான்கு கட்டங்களில்
எழுதி விட முடியாது என்று..

மேலும் சொல்லிவிடு,,
உன்னைப்பற்றி
தெரிந்து கொள்ள,
உன் மெளனத்தை,
மொழி பெயர்த்து,
நான் எழுதிய கவிதைகள்
போதுமென...


பூமி தன்னைத் தானே சுற்றுவதால்,
இரவும், பகலும் வருகிறது..
நான் உன்னை சுற்றுவதால்,
கவிதையின் முடிவில் கவிதையே வருகிறது..
இது கவிதையின் விதியோ?
காதலின் விதியோ?

உனக்கான கவிதைகள் முடிவதில்லை..
என் உயிருள்ள வரை..

நீ தூக்கத்திலிருந்து
துயிலுருவதை கவிதையாக்க
காத்திருக்கிறேன்..
விடியலை நோக்கி...
Download As PDF