Tuesday, May 26, 2015

நீ, நான்,, காதல்...

நீ,
நான்,,
காதல்...


என் தேவதையே,
உன்னிடம் நிறைய,
பொய் சொல்லிருக்கிறேன்..
உன் காதலுக்காக..

நீயோ!
பொய்யா?
உன்னுடைய எந்த கவிதையை
சொல்கிறாய் என்பாய்..

காதலில் நம்பிக்கை என்பது
காதல் தான் என்பதை
புரிய வைத்தவள் நீ..


உன்னை சந்தோஷப்படுத்தும்,
பொய்கள் யாவும்,
கவிதையாகின்றன..
நானும் கவிஞனாகிறேன்..

இப்படித்தான்,
என்னிடமே சொல்லாமல்,
நிறைய நாட்கள்,
நீயும், நானும்
எப்பொழுதும்
சந்திக்கும் இடத்தில்
எனக்காக காத்திருப்பாய்..

என் உள்ளுணர்வு,
நானும் உன்னை தேடி
வந்திருக்கிறேன்..

ஏன் இவ்வளவு நேரம்?
என்னைப்பார்த்தவுடன்
காத்திருப்புக்காக,
கோபம் கொள்வாய்..

உன்னை புரிந்து
கொள்ள முடியாதடி,
இந்த காதலையும் தான்..
இது தேவதை காதல்...


காலங்கள் சென்றன..
வயதுகள் ஓடின..
காலபைவரவன் உன்னை,
எனக்கு முன்னே கூட்டி கொண்டான்..

நான்,,
காதல்...

ஒன்றுமே புரியவில்லை எனக்கு,
இங்கு உன் நினைவுகளோடு வாழ்வதா?
இல்லை, உன்னுடன் இணைவதா?

மறையவில்லை நீ,
என் கண்களிலிருந்து..

மறைந்தேன்...
நிழல் தேவையில்லை..
நிஜம் என் தேவதை..



நீண்ட தூர பயணம்,
கண்ணீருடன்..

வெண்புகை,
மேகம்
கடவுள்..

எல்லாவற்றையும் கடந்தேன்..

கண்முன்னே,
அழகான அருவி,
மரங்கள்,
மலர்கள்..

தேவதையாய் நீ வீற்றிருந்தாய்..

கண்களை
இருமுறை கசக்கி
மறுமுறை பார்த்தேன்..


நீ
நீயே தான்..

நீயோ,
என்னைப்பார்த்தவுடன்,
எவ்வளவு நேரம்?
இங்கு காத்திருப்பது என்றாய்..

தேவதை உன்னை புரிந்து
கொள்ள முடியாதடி,
இந்த காதலையும் தான்..

மறுபடியும்,
நீ,
நான்,,
காதல்...


Download As PDF

Wednesday, September 24, 2014

நான் உன்னை காதலிக்கிறேன்...

சொல்லி புரிய வைக்க முடியாதது,
என தெரிந்தும்,
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதிலிருந்து தொடங்கிறது..
என் காதல்...

தேவதை உன்னை,
என் இமைக்குள் சிறைப்பிடித்து,
கண்களை மூடி தான்,
காதலில் விழுந்தேன்..

















உன்னிடம் காதலை சொன்னதும்,
உன்னை காதலிப்பதும்,
என் மனதில்,
கடைசியாக பதிந்ததாய் இருக்கட்டும்..

ஏவாளே!
ஏதாவது கனி கொடு,

ஆதாமாகிய எனக்கு,
ஆறாம் அறிவு,
இனி தேவையில்லை..
இந்த காதலில்...



Download As PDF

Saturday, April 5, 2014

இரவில் ஒளிரும் தேவதையே...



இந்த பிரபஞ்சத்தில்,
ஏதோ ஒரு கோளில்,
வாழும் அறிவியல் அறிஞன் ஒருவன்,
தொலைநோக்கியால் உன்னை காணக்கூடும்.

உன்னை ரசிக்க கூடும்.

உன்னழகில் காதலில் விழ நேரிடும்.

உனக்காக கவிதைகள் பல எழுத நேரிடும்.

இரவில் மின்மினுக்கும் ஏதோ ஒன்றை
கண்டுபிடித்து விட்டதாய் அவன் அங்கு கத்துவான்.

தயவு செய்து,
உள்ளே வா?
இந்த பூமியின்,
இரவில் ஒளிரும் தேவதையே...

Download As PDF

Sunday, January 19, 2014

நான் ஏன் நிலவைக் காதலித்தேன்?



பிரபஞ்சம் முழுவதும்,
நட்சத்திரங்களால் நிறைந்திருக்க,
நான் ஏன் நிலவைக் காதலித்தேன்?

நிலவுக்கும் எனக்குமான,
உறவு இன்று ஏற்பட்டதில்லை..
தாயின் மடியிலிருந்து,
அவள் நிலவைக்காட்டி,
சோறுட்டிய நாளிலிருந்து..


நடக்க ஆரம்பித்த பிறகு,
சிறுவயதில்,
நிறைய முறை
முயன்று பார்த்திருக்கிறேன்..
நான் ஓடிய பக்கமெல்லாம்,
நிலவு வருகிறதா என்று?
ஒளிந்து மறைந்து..

















நிலாவிடம் காதல் சொல்ல,
மண்ணில் அதன்,
நிழல் தேடி அலைந்தேன்..

நீரில் அதன் பிம்பம் கண்டு,
காப்பாற்ற விழைந்தேன்..

எல்லாம் காதல்..




















சிறுவயது காதலெல்லாம்,
குழந்தைதனம் என்றார்கள்..
கடைசி வரை வராது என்றார்கள்..

பெரியவன் ஆன பிறகு,
முகமறியா ஊருக்கு,
முதல் முதலில் பயணப்பட,
அதிகாலையில் அவ்வூறை அடைந்த பிறகு,
மண்ணில் தெரிந்த முகம்,
ஏதாவது தென்படுகிறதா?
என தேடி,
தேய்ந்து,
ஓய்ந்த பிறகு,
விண்ணில் விழி உயர,
எனக்காக காத்திருக்கும் நிலவை
பார்த்ததிலிருந்து காதலித்தேன்,,



அதுசரி,
பிரபஞ்சம் முழுவதும்,
நட்சத்திரங்களால் நிறைந்திருக்க,
நான் ஏன் நிலவைக் காதலித்தேன்?

என்னை நெருங்கி வரும்,
நட்சத்திரம் ஒன்று,
நிலவனதோ??

என் நிலவனதோ?




Download As PDF

Wednesday, January 8, 2014

காதல் - ஜாக்கிரதை......

நீ ஒரு தேவதையிடம்,
காதல் கொண்டால்,

தேவதை உன்னை எப்போதும்,
ஒரு வழிப்பாதையிலே
கூட்டி செல்கிறாள்..

அவள் உன் கைப்பிடித்து,
கூட்டி செல்லவே பிரியப்படுகிறாள்...
காதலுக்குதான் கண்ணில்லையே,
கண்களை வேறு மூடி கொள்ள சொல்வாள்..
நீயும் அசட்டுதனமாய்,
அவளை எப்படி பார்ப்பது என்பாய்..

அவள் சிரிப்பில்,
நீ திசைகளை மறப்பாய்..

ஒரு வேளை,
நீ நடந்த வந்த பாதையில்,
திரும்பி பாதச்சுவடுகளை தேடினால்,
அங்கு பாதைகளே மறைந்து போயிருக்கும்..
இது தேவதைகளுக்கு மட்டும்
தெரிந்த ரகசியம்..

காதல் என்பது ஒரு வழிப்பாதை..
அதற்கு பிறப்பு மட்டும் தான்..

ஒருவேளை,
இறப்பு என்பது
அவளுடன் இணைந்தே இருக்கும்..

நீயும் அதற்கே ஆசைப்படுவாய்..

காதல் என்பது ஒரு வழிப்பாதை - ஜாக்கிரதை..
Download As PDF

Monday, November 4, 2013

காதலின் அறிகுறி..



இறக்கையுடன் தேவதையை
பார்க்கும் போதெல்லாம்,
இதயம் பறந்து
அவளை சுமக்கத் துடிக்கும்..

காதலின் அறிகுறி..
Download As PDF

ஒரு ஆதாமின் ஆசை..

நிஜமொன்று
நிழலுக்காக
காத்திருப்பதும்..



விழிகளை தேடுவதும்..

கண்டால் புன்னகைப்பதும்,

கைப்பிடித்து நடக்கையில்,
காலத்தை வென்றதாய் உணர்வதும்,

பிறப்பின் அர்த்தம் புரிந்ததாய்,
சாதிக்க எதுவுமின்றி,
தொலைவதும்,



நாழிகைகளை ஈன்றெடுத்து,
பூமியை தொலைவிலும்,
நிலவை அருகாமையில் தேடுவதும்..

இருதயம் பூப்பதும்,
அதன் இறக்கைகளில்
அவளை சுமந்து பறப்பதும்,

காதல்..
ஆதலால் காதல் செய்வீர்..



Download As PDF