Tuesday, May 26, 2015

நீ, நான்,, காதல்...

நீ,
நான்,,
காதல்...


என் தேவதையே,
உன்னிடம் நிறைய,
பொய் சொல்லிருக்கிறேன்..
உன் காதலுக்காக..

நீயோ!
பொய்யா?
உன்னுடைய எந்த கவிதையை
சொல்கிறாய் என்பாய்..

காதலில் நம்பிக்கை என்பது
காதல் தான் என்பதை
புரிய வைத்தவள் நீ..


உன்னை சந்தோஷப்படுத்தும்,
பொய்கள் யாவும்,
கவிதையாகின்றன..
நானும் கவிஞனாகிறேன்..

இப்படித்தான்,
என்னிடமே சொல்லாமல்,
நிறைய நாட்கள்,
நீயும், நானும்
எப்பொழுதும்
சந்திக்கும் இடத்தில்
எனக்காக காத்திருப்பாய்..

என் உள்ளுணர்வு,
நானும் உன்னை தேடி
வந்திருக்கிறேன்..

ஏன் இவ்வளவு நேரம்?
என்னைப்பார்த்தவுடன்
காத்திருப்புக்காக,
கோபம் கொள்வாய்..

உன்னை புரிந்து
கொள்ள முடியாதடி,
இந்த காதலையும் தான்..
இது தேவதை காதல்...


காலங்கள் சென்றன..
வயதுகள் ஓடின..
காலபைவரவன் உன்னை,
எனக்கு முன்னே கூட்டி கொண்டான்..

நான்,,
காதல்...

ஒன்றுமே புரியவில்லை எனக்கு,
இங்கு உன் நினைவுகளோடு வாழ்வதா?
இல்லை, உன்னுடன் இணைவதா?

மறையவில்லை நீ,
என் கண்களிலிருந்து..

மறைந்தேன்...
நிழல் தேவையில்லை..
நிஜம் என் தேவதை..



நீண்ட தூர பயணம்,
கண்ணீருடன்..

வெண்புகை,
மேகம்
கடவுள்..

எல்லாவற்றையும் கடந்தேன்..

கண்முன்னே,
அழகான அருவி,
மரங்கள்,
மலர்கள்..

தேவதையாய் நீ வீற்றிருந்தாய்..

கண்களை
இருமுறை கசக்கி
மறுமுறை பார்த்தேன்..


நீ
நீயே தான்..

நீயோ,
என்னைப்பார்த்தவுடன்,
எவ்வளவு நேரம்?
இங்கு காத்திருப்பது என்றாய்..

தேவதை உன்னை புரிந்து
கொள்ள முடியாதடி,
இந்த காதலையும் தான்..

மறுபடியும்,
நீ,
நான்,,
காதல்...


Download As PDF

No comments:

Post a Comment