Thursday, July 12, 2012

என் நிலாவின் தேவதையே..

உன்னைப் பார்த்தவுடன்,
கேட்பதற்கென்றே,
கேள்வி ஒன்றை வைத்திருக்கிறேன் நான்..


எப்போது நிலவில் இருந்து,
பூமிக்குள் வந்தாய் என்று??

எனக்கு வாய்த்தவள்..நீ..
அறிவாளியாகத் தான் பேசுவாய்..

23 வருடங்கள் என்பாய்..
நீ பிறந்து,
உன் வயது..

ஆனால்,
அதைப்புரிந்து கொள்ள,
உன்னளவு தெளிவில்லை நான்..

நீயும் புரியாதவளாய்?
உன் கண்ணில்,
கேள்விகுறியாய் நான்...
உன் கண்கள் கூட பேசுமோ?
பயத்தில உளறினேன்..



"தேவதைகள் எல்லாம்,
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??

கேட்டுக்கொண்டே,
உன் முகத்தின் பாவனைகளை
மொழிப் பெயர்க்க முடியாமல் தடுமாறினேன்..

ஆனால்,
நீயே என்னை கொல்ல,
உன் சிரிப்போடு,
வெட்கத்தையும் சேர்த்து
பதிலாய் தந்தாய்..

இது தான் உன் பதில் என்றால்,
சிரிப்பு கலந்த வெட்கத்தை பெற,
இன்னமொரு கேள்விக்கு
நான் எங்கு போவேன்..
இப்படியே தேடலுடன் தொடங்குகிறது..
என் வாழ்க்கை உன்னுடன்..

என் நிலாவின் தேவதையே..
Download As PDF