நிஜமொன்று
நிழலுக்காக
காத்திருப்பதும்..
விழிகளை
தேடுவதும்..
கண்டால் புன்னகைப்பதும்,
கைப்பிடித்து நடக்கையில்,
காலத்தை வென்றதாய் உணர்வதும்,
பிறப்பின் அர்த்தம்
புரிந்ததாய்,
சாதிக்க எதுவுமின்றி,
தொலைவதும்,
நாழிகைகளை
ஈன்றெடுத்து,
பூமியை தொலைவிலும்,
நிலவை அருகாமையில்
தேடுவதும்..
இருதயம் பூப்பதும்,
அதன் இறக்கைகளில்
அவளை சுமந்து
பறப்பதும்,
காதல்..
ஆதலால் காதல் செய்வீர்..
Download As PDF