Wednesday, January 8, 2014

காதல் - ஜாக்கிரதை......

நீ ஒரு தேவதையிடம்,
காதல் கொண்டால்,

தேவதை உன்னை எப்போதும்,
ஒரு வழிப்பாதையிலே
கூட்டி செல்கிறாள்..

அவள் உன் கைப்பிடித்து,
கூட்டி செல்லவே பிரியப்படுகிறாள்...
காதலுக்குதான் கண்ணில்லையே,
கண்களை வேறு மூடி கொள்ள சொல்வாள்..
நீயும் அசட்டுதனமாய்,
அவளை எப்படி பார்ப்பது என்பாய்..

அவள் சிரிப்பில்,
நீ திசைகளை மறப்பாய்..

ஒரு வேளை,
நீ நடந்த வந்த பாதையில்,
திரும்பி பாதச்சுவடுகளை தேடினால்,
அங்கு பாதைகளே மறைந்து போயிருக்கும்..
இது தேவதைகளுக்கு மட்டும்
தெரிந்த ரகசியம்..

காதல் என்பது ஒரு வழிப்பாதை..
அதற்கு பிறப்பு மட்டும் தான்..

ஒருவேளை,
இறப்பு என்பது
அவளுடன் இணைந்தே இருக்கும்..

நீயும் அதற்கே ஆசைப்படுவாய்..

காதல் என்பது ஒரு வழிப்பாதை - ஜாக்கிரதை..
Download As PDF

No comments:

Post a Comment