Saturday, April 5, 2014

இரவில் ஒளிரும் தேவதையே...



இந்த பிரபஞ்சத்தில்,
ஏதோ ஒரு கோளில்,
வாழும் அறிவியல் அறிஞன் ஒருவன்,
தொலைநோக்கியால் உன்னை காணக்கூடும்.

உன்னை ரசிக்க கூடும்.

உன்னழகில் காதலில் விழ நேரிடும்.

உனக்காக கவிதைகள் பல எழுத நேரிடும்.

இரவில் மின்மினுக்கும் ஏதோ ஒன்றை
கண்டுபிடித்து விட்டதாய் அவன் அங்கு கத்துவான்.

தயவு செய்து,
உள்ளே வா?
இந்த பூமியின்,
இரவில் ஒளிரும் தேவதையே...

Download As PDF

No comments:

Post a Comment