ஒரு மாலை வேளையில்,
ஒரு காட்டுப் பாதையில்,
ஒரு காதலனும், காதலியும்
நடந்து செல்லும் போது,
கடவுள் தீடிரென,
அவர்கள் முன்னே தோன்றினார்..
காதலனிடம்,
உன் காதலி,
உயிரற்ற பொருளாக மாறும்,
சாபத்தை பெற்றுள்ளாள்..
அவள் என்னவாக மாறினால்,
உனக்கு சந்தோஷம் என்று கடவுள் கேட்டார்..
நீ சொல்லும் பதிலில்,
உன் காதலிக்கு உயிர் கிடைக்கும் என்றார்..
பதறிப் போனான் அவன்..
அவள் இல்லாத வாழ்க்கை
ஒன்று எனக்கு இல்லை..
நான் உறங்கும் சவப்பெட்டியாக
அவளை மாற்றி விடுங்கள் என்றான்..
உன் காதலின் மென்மையைக் கண்டோம்..
உன் காதலியை விட்டோம் என்றார்..
அடுத்து அவன் காதலியிடம் கேட்டார்..
உன் காதலன்,
உயிரற்ற பொருளாக மாறும்,
சாபத்தை பெற்றுள்ளான்..
அவன் என்னவாக மாறினால்,
உனக்கு சந்தோஷம் என்று கேட்டார்..
ஆனால், அவளோ!!
அவனை தீக்குச்சியாக மாற்றும் படியும்,
அவனை வைத்து,
தன்னை எரித்து,
உன்னையும் எரித்து விடுவேன்..
என்றாள் கடவுளிடம்..
அவளுக்குள் ஒரு சாவித்திரியையும்,
ஒரு கண்ணகியையும் பார்த்ததாக
சொல்லி விட்டு மறைந்தார் கடவுள்,
நேற்று இரவு அவன் கனவில்...
No comments:
Post a Comment