Sunday, November 20, 2011

ஒரு கண்ணாடி அறைக்குள்..

அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்தான் ஒருவன்.

எதையும் தொலைக்காமல்,
தேடிச் செல்லும்
அவன் வாழ்க்தை தான்,
வலைதளங்களில்..

தனிமை என்பது எனக்கு இல்லை
என்று சொல்லி,
முகப்புத்தகத்தில்,
முகத்தெரியாதவர்களின் வருகைக்காக,
காத்திருக்கும் அவன்.

முகம் பார்த்து பேசும்
உணர்ச்சிகளை பற்றி தெரிந்திருந்தும்,
அவன் உறவுகள்,
எப்போதும் அலைபேசியில்..

டாலர்களின் உறவுக்காக,
தூர தேசம் போன அவன்..
அவ்வவ்போது காணொளிப்பேசியில்.
அவன் உயிர்களுடன்,
மனைவியும், குழந்தையும்..

சில சமயங்களில்,
அவன் இரவும்,
அர்த்தமற்று நிற்கிறது..
இமைகளின் பிரிவால்..
விடியலை நோக்கி அவன்..

புரியாத அவன் வாழக்கை,
ஏதோ ஒரு தேடலில்,
எப்போதும் கணிணியுடன்
ஒரு கண்ணாடி அறைக்குள்..

அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்த,
கணிப்பொறியாளன்...

வாழ்க்கை என்றால் என்ன?
என்பதையும்,
ஏதோ வலைதளத்தில்
தேடிக்கொண்டிருந்தான்..

Download As PDF

No comments:

Post a Comment