Monday, March 12, 2012

என் கேள்விக்குறி கவிதைகளே..


என் தனிமைக்கும்,
கற்பனைக்கும்,
காதல் வரும் போதெல்லாம்,
அவளுக்கான கவிதை விரிகிறது...

அவளுக்கான தேடலில்,
உயிர் பெறும் வார்த்தைகள்
மட்டும் கவிதையாகின்றன..

ஒவ்வொரு முறையும்,
அவளுக்கான கவிதையை
எழுதி முடித்த திருப்தியில்..
அக்கவிதைகளின்
முற்று புள்ளிகளில்,
இறந்து போகிறேன் நான்...



மீண்டுமொரு,
கவிதையில்
பிறக்கிறேன்..

கற்பனையையும், தனிமையையும்
பிரிக்க முடியாமல்
கவிதையின் முடிவுக்காக காத்திருந்தேன்..

நானோ பூமியில் பிறந்தவன்..
ஒருவேளை அவள் நிலவில் பிறந்திருப்பாளோ???

சரி??????????
கேள்விதனைக் கொண்ட,
என் கவிதைகள் யாவும்
கேள்விக்குறி ஆகும்..



அவள்
வந்து படிக்கும் போது,
கவிதைகள் யாவும் உயிர் பெறும்.
என் காதலும்..

Download As PDF

No comments:

Post a Comment