மனிதநேயத்தை,
மலரச் செய்ய வேண்டும்..
எவ்வாறு மலரச் செய்யலாம்???
பள்ளிக் கவிதை போட்டியில்,
எழுதியாக வேண்டும்..
ம்...
என்ன சொல்லி, என்ன பயன்??
மனிதன் படித்து விட்டு மறந்து விடுவான்..
ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
மனித நேயத்தை நாம் மலர செய்ய வேண்டியதில்லை..
அதுவே பூத்து குலுங்கும்..
No comments:
Post a Comment