Wednesday, November 24, 2010

யார் அவன்???

எல்லாக் கதைக்கும்,
ஒரே முடிவை எழுதும்,
மிகச்சிறந்த எழுத்தாளன்,
ஒருவன் கதை எழுதுகிறான்..

தனக்கான கதையை,
தானே எழுதி,
நடித்துக் கொண்டிருக்கும்,
மனிதனை பற்றியது அது..

அவன் எழுதிய கதைகளில்,
படிக்கத் தூண்டும்,
தலைப்புகள் சில..

ஒரு பணக்காரனின் கதை..

பலம் மிகுந்த போர்வீரனின் கதை..

அகிம்சை வழியில் போராடுவனின் கதை..

ஒரு ஆராய்ச்சியாளனின் கதை..

பாவம்,
அது ஒரு ஏழையின் கதை..

சில சமயங்களில்,
அது ஒரு பக்கக் கதையாகவும் இருக்கிறது..
அது ஒரு குழந்தையின் கதை..

ம்..

கதை எவனுடையதாக வேண்டுமானாலும்,
இருந்து விட்டு போகட்டும்..
எவன் வேண்டுமானாலும்,
எப்படி வேண்டுமானாலும்,
நடித்து விட்டு போகட்டும்.

ஆனால்,
அந்த,
முட்டாள் எழுத்தாளின்,
முடிவு ஒன்று தான்,
இறப்பு...
Download As PDF

No comments:

Post a Comment