பல்லாயிரக்கணக்கான,
பெண்களை கடக்கும் போதெல்லாம்,
மூளை யோசிக்கிறது
எனக்கானவள் யாரென்று..
உடல் மூளையின்,
கட்டுப்பாட்டுக்குள்,
இருப்பதுதான்.
இயற்கையின் படைப்பு..
இப்பொழுது மட்டும் என்ன?
என் மூளையே!
இதயத்தின் கட்டுப்பாட்டில்,
வந்து இருக்கிறது..
ஏதோ ஒரு முரண்பாடு..
மூளையின் கடைசி எச்சரிக்கையுடன்,
அதன் செயல்பாட்டை,
முடித்து கொண்டது..
இயற்கைக்கு புறம்பாக,
ஏதோ நிகழப் போகிறது
என்ற பயத்தில்,
சுற்றும் முற்றும்..
திரும்பிப்பார்த்தேன்,,
தூரத்தில் எவளோ?
ஒருவள் வருகிறாள்..
நிம்மதி அடைந்தேன்..
இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
வருவது பெண்தானே!!
பயமில்லை..
இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்..
இதயம் மட்டும் துடித்தது..
அவள்,
என் பின்னால் இருக்கும்,
உன் முதுகெலும்பால்
உருவானவள் என்று..
புரியவில்லை..
காதலும் அதன் இயற்கையும்..
No comments:
Post a Comment