என் உயிரின்
உடல் இருக்கிறது..
உயிரில்லை..
எனக்கோ! உயிர் இருக்கிறது..
உணர்வில்லை..
ஆக்கமும், அழித்தலும் எவனோ..
காத்தலும், காதலும் நானே...
காத்தலில் குறையோ?
காதலில் குறையோ?
நீ இல்லை..
வழியில்லை..
விழி மூடி
பயணமில்லை..
ஏழேழு ஜென்மத்துக்கும்,
என் வாழ்வு அவளுடன்,
என்று ஏதோ ஒரு கவிதையில்,
எழுதி வைத்த நம்பிக்கயைில்,
இறந்த போனவளின்,
கல்லறையில் எழுதி வையுங்கள்..
இவள் எனக்காக
மறுபடியும் பிறப்பாள் என்று...
விழி மூடியவளுக்கான,
கடைசிகவிதையை
இப்பொழுதே
எழுதி வைக்கிறேன்..
என் கவிதைகளையும்,
இவளோடு புதைத்து விடுங்கள்..
எடுத்து படி என்னவளே!
நீ இறந்து மறுநொடி
இறந்திருப்பேன்..
உனக்கு முன்னே,
பிறந்திருப்பேன்..
No comments:
Post a Comment