இன்று காதல் கடிதம் எழுதுவது
என முடிவெடுத்தேன்..மலரும் நினைவுகள்...
முதல் நாள்..
முதல் பள்ளிக்கூடம்..
முதலாம் வகுப்பு..
எழுத்துக்களைக் கற்று முடித்தவுடன்,
அவள் பெயரைக் கேட்டு,
எழுதி காட்டினேன் - சிரித்தாள்..
எண்களைக் கற்று முடித்தவுடன்,
அவள் வீட்டு தொலைப்பேசி எண்ணை கண்டுபிடித்து,
அவளிடம் சொன்னேன் - ஆச்சர்யப்பட்டாள்..
எல்லாம் கற்று முதலாம் வகுப்பு
தேர்ச்சிப் பெற்றேன் - அவளும் தான்..
முழு விடுமுறை முழுவதும் உட்கார்ந்து,
அவளுக்காக காதல் கடிதம் எழுதிதேன்.
அனுப்புனர், பெறுனர் இட்டு,
அப்பாவின் கையெழுத்தையும் போட்டு..
முதல் நாள்,
அதே பள்ளிக்கூடம்,
இரண்டாம் வகுப்பு..
முதலாம் ஆண்டு படித்ததன்,
அத்தனை திறனையும் பயன்படுத்தி.
எழுதிய கடிதத்தை அவளிடம் கொடுத்தேன்..
அதில் நிறைய பிழைகள் இருப்பதாகவும்,
அப்பாவின் கையெழுத்தை நானே
போட்டதையும் கண்டுபிடித்து.
காதலை நிரகாரித்தாள்..
எல்லாம் நினைவில் வைத்து,
இன்று,
காதல் கடிதம் எழுதி முடித்தேன்..
தவறில்லாமல்..
அவளுக்கு அல்ல..
அவளை போல் ஒருவளுக்கு.....
No comments:
Post a Comment